அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது

4  
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.

5  
அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது

6  
அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.

7  
சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.

8  
அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோம்.

9  
நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ்சொல்லுதலும் குறைவுள்ளது.

10  
நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.

11  
நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.

12  
இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.

13  
இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.

1 Corinthians 13 in Tamil

1 Corinthians 13 in English

இந்த இடுகை இதிலேயும் கிடைக்கிறது: போர்த்துகீசியம் அராபிய மொழி பெலருசியன் வங்காள மொழி பல்கேரியன் டேனிஷ் பின்னிஷ் ஜார்ஜியன் கிரேக்கம் ஹிந்தி ஹங்கேரியன் மலாய் மங்கோலியன் நேபாளி நார்வேஜியன் போர்த்துகீசியம் (போர்ச்சுகல்) சிங்களம் ஸ்லோவேக் சுவாஹிலி ச்வீட மொழி தெலுங்கு துருக்கிய மொழி சூலு செக் மலையாளம் ஸ்பானியம் (ஸ்பெயின்) லிதுவேனியன் மராத்தி பஞ்சாபி குஜராத்தி மக்கதோனிய மொழி அம்ஹாரிக் உஸ்பெக்

Categoriesபகுக்கப்படாதது